உனக்காகவே உயிர் வாழ்கிறேன்

உனக்காகவே உயிர் 
      வாழ்கிறேன்

வெட்டிவிட்ட நகம் போல
வீசிவிட்டு போன பின்பும்
கொட்டிவிட்ட தேள் போல
கோபங்காட்டி சென்ற பின்பும்
வைத்த அன்பு போகவில்லை
நீ வைத பின்பும் மாறவில்லை

சிறகடித்துக்
கொண்டேயிருக்கும்
சிகரம் தொடாத
கடற்பறவை போல
படபடத்துக் கொண்டேயிருக்கும் என் இதயவோசை
எட்டவில்லை
உன் காதில்

நெஞ்சினிலே சாய்ந்து
நெற்றிமுடி நீவி
ஒற்றை முத்தம் தந்து
உன்னில் ஒன்றிவிட
ஏங்கும் என்னை
ஊடல் செய்தால்
தாங்கிக்கொள்வேன்

ஊடறுத்து செல்லும்
வெள்ளத்திலே நீ
வேகமாக ஓடும் ஓடமானால்
என்ன ஆவேன்

என் அரக்கனே
என் அன்பனே
தள்ளிச்சென்று கிள்ளிவிட்டு
அழுகையையும் ரசிக்கிறாய்

துளிர்த்த கண்ணீர்
துடைத்தும்
கொஞ்சம் நடிக்கிறாய்
யார் நீ
நீ யாராக இருந்தாலும்
உனக்காகவே உயிர்
வாழ்கிறேன்

  புத்தளக்கவி
       நிஸ்னி

Comments

Popular posts from this blog

வீழ்வேனென்று நினைத்தாயோ